Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் இரும்பேடு கிராமத்தை சேர்ந்த ஏழை மாணவி தீபா மற்றும் செங்கம் வட்டம், நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஏழை மாணவி பிரியா ஆகியோர் ஏழ்மையான நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
அவர்கள் அதிக மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் முறையே சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மதுரை அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகளை நேரில் சென்று சந்தித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி இருவருக்கும் தலா 50,000 ரூபாய் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.